தேசிய வேலைவாய்ப்பு கொள்கை- டிசம்பருக்குள் இறுதி வடிவம்!!
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் சார்பில் தேசிய வேலைவாய்ப்பு கொள்கை நடைமுறைபடுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதி வடிவம் டிசம்பர் இறுதிக்குள் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வேலைவாய்ப்பு கொள்கை:
தேசிய வேலைவாய்ப்பு கொள்கை, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நாட்டின் வேலைவாய்ப்பினை அதிக அளவில் உருவாக்க தேவையான வழிமுறைகளை தேசிய வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகளில் முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க பிற திட்டங்கள் மூலம் முயற்சி செய்தல் போன்றவற்றிற்காக தேசிய வேலைவாய்ப்பு கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு – முதல்வர் அறிவிப்பு!!
மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில், தொழில் முறை உறவு, சமூக பாதுகாப்பு மற்றும் தொழில் சார்ந்த சுகாதார பாதுகாப்பு, பணி நிலைமை போன்ற தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியது. ஆனால் 4 சட்டங்களையும் ஒரே நேரத்தில் அரசு செயல்படுத்த விரும்பியதால் அந்த சட்டங்களை உடனடியாக செயல்படுத்தவில்லை. தற்போது இந்த 4 சட்டங்களும் ஏப்ரல் 1-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!
இந்த திட்டம் குறித்து புலம்பெயர் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் தேசிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு தொழிலாளர் அமைச்சகம் இறுதி வடிவம் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டில் 50 கோடிக்கு அதிகமான மக்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட இன்னும் சில பாதுகாப்புகள் அளித்து உலகமயமாக்கலுக்கு தேவையான சட்டங்கள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்