கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு – முதல்வர் அறிவிப்பு!!

0
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு - முதல்வர் அறிவிப்பு!!
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு - முதல்வர் அறிவிப்பு!!
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வருகிற ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலவச இணைய சேவை கார்டு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி உயர்கல்வி பயிலும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் இலவசமாக 2ஜிபி டேட்டா இணைய இணைப்பு அட்டை மூலமாக வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு இலவச டேட்டா:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 2011-12ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் தொழில்நுட்ப அறிவினை பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் அவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. இதனால் அரசு, அரசு உதவி பெறும் மாணவர்களின் படிப்பிற்காக அவர்களுக்கு தினசரி இலவச 2ஜிபி டேட்டா வழங்க தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்!!

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக அரசு மேற்கொண்ட பல சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 32 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தியது.

TNFUSRC வேலைவாய்ப்பு 2021 || ஊதியம்: ரூ.30,000/-

இந்நிலையில் கொரோனா காரணமாக கல்லூரிகள் சார்பில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், உயர்கல்வி பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் 9 லட்சத்து 69,047 மாணவ-மாணவியருக்கு இலவச இணைய இணைப்பு அட்டைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!

இதன்மூலம் கொரோனா நோய் தொற்று காலத்திலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக எளிதாக பாடங்களை கற்க முடியும். இலவச மடிக்கணினி வழங்கிய தமிழக அரசு, அத்துடன் இணைய சேவையை வழங்க மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை பல முறை கோரிக்கை வைத்துள்ள நிலையில் தற்போது நான்கு மாதங்கள் இலவச டேட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!