ஓராண்டு LLM நீக்கம், முதுகலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு – பார் கவுன்சில் முடிவு!!
யுஜிசி அறிமுகப்படுத்திய ஓராண்டு எல்எல்எம் படிப்பை நீக்க பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் முதுகலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தவும் பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சட்டப்படிப்பு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’, ஐஐடி, ஐஐஎம் என பொறியியல் படிப்புகளுக்கு ‘ஜேஇஇ’ என நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதனை போன்று முதுகலை சட்டபடிப்பிற்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்துள்ள போதிலும் பார் கவுன்சில் சட்ட விதிக்கல் 2020ன் படி இதற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை திட்டம்!!
இந்த நுழைவுத்தேர்வு முறைப்படி அமல்படுத்தப்பட்ட பின்னர் அதன் தேர்வு முடிவு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே முதுகலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதுவரை சட்டக்கல்லூரிகளில் தற்போது பின்பற்றப்படும் பழைய முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில முக்கிய முடிவுகளையும் பார் கவுன்சில் எடுத்துள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி இலவச டேட்டா கார்டு – முதல்வர் அறிவிப்பு!!
அதில் 2013ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டு எல்எல்எம் முதுகலை சட்டப்படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் முதுகலை சட்டப்படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றி அமைத்து, 4 செமஸ்டர் வகுப்புகள் நடத்தவும் பார் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அமலுக்கு வர மேலும் ஓராண்டு எடுக்கும் என்பதால் அதுவரை பழைய நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்