தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான சூப்பர் சான்ஸ் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான சூப்பர் சான்ஸ் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான சூப்பர் சான்ஸ் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான சூப்பர் சான்ஸ் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்ள அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதையடுத்து தற்போது சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை விழுப்புர மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு ஆண்டில் (2022-2023) அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதே போல் 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அத்துடன் தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதில் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைக்கு வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு வருகிற நவம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான விபரங்கள் அனைத்தும் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை நீங்கள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!