தமிழக கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது வரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.
இனி ரயில் டிக்கெட் பெறுவது ரொம்ப ஈஸி – இந்த செயலியை பயன்படுதுங்க.. பயணிகள் மகிழ்ச்சி!
Exams Daily Mobile App Download
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள 35 கல்லூரிகள் தேசிய அளவில் இடம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.