தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பெற்றோர்கள் அதன்படியே செய்யலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடனான ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் பரவும் விகிதம் குறைந்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் – கூட்டணி கோரிக்கை!
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கி வருகிறது. அதனை தொடர்ந்து சினிமா தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், மதுக்கடைகள், சுற்றுலா தலங்கள் முதலியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, வருகிற 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பெற்றோர்கள் அதன்படியே செய்யலாம் என்று கூறியுள்ளார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரி – ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு!
மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் பிரச்சினை சரி செய்ய வழி பிறக்கும். இந்த திட்டம் உன்னதமான திட்டம் ஆகும். மாலை நேர வகுப்பாக இந்த பயிற்சி நடைபெறும். இது குறித்து பயிற்சி கொடுக்க படித்த தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேற்று வரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.