விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரி – ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு!
விஜய் டிவியில் பிரமாண்டமான சர்வதேச நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடங்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் 21 நாட்கள் ஆனாலும் இன்னும் வைல்ட் கார்டு என்ட்ரி பற்றி எந்த தகவலும் வெளியாகததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது மூன்று வாரங்கள் முடிவடைந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் வாரத்தில் வெளியேறினார். அதன் பின் இரண்டாவது வாரத்தின் தலைவராக தாமரை தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் 15 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர்.
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் டிவியில் ஒளிபரப்பு – ரசிகர்கள் உற்சாகம்!
அதில் மக்களிடம் குறைவான வாக்குகளுடன் நாதியா சங் வீட்டை விட்டு வெளியேறினார். மூன்றாவது வாரத்தில் 9 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்த நிலையில் குறைவான வாக்குகளுடன் அபிஷேக் ராஜா வீட்டை விட்டு வெளியேறினார். வழக்கமான சீசன்களில் 15, 16வது நாட்களில் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் ஆனால் தற்போது 3 வாரங்கள் முடிவடைந்த நிலையில் வைல்ட் கார்டு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது. நமிதா இன்னும் பிக்பாஸ் நிர்வாகம் பொறுப்பில் இருப்பதால் அவர் மீண்டும் வீட்டிற்குள் அனுப்ப வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிஷேக்கின் ஒரு வார சம்பளம் – வெளியான தகவல்!
அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டிற்கு வர வாய்ப்பிருக்கும் நபர்களில் நடிகை ஷகிலாவின் மகள் மிளா இருந்தார். அவர் வீட்டிற்குள் வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஒயில்கார்டு என்ட்ரியோ, அது பற்றிய தகவலோ வெளியிடப்படவில்லை. இதனால் ஒயில்கார்டு என்ட்ரி எப்போது நடைபெற உள்ளது, எந்த பிரபலம் வர போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.