TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஹால் டிக்கெட் – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

1
TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஹால் டிக்கெட் - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஹால் டிக்கெட் - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஹால் டிக்கெட் – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வானது விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

விரிவுரையாளர் தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. இதில் 1,058 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் மறுதேர்வானது வரும் அக். 28 ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் போ் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தேர்வு மையங்களின் பட்டியல் வெளியானது.

அக்டோபர் 26ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

விண்ணப்பதாரர்களுக்கு சுமாா் 300 முதல் 450 கிலோ மீட்டா் தொலைவில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு தென் மாவட்டங்களில், தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு வட மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால் தேர்வர்களுக்கு கடும் அலைச்சல் மற்றும் அதிகமான செலவு ஏற்படும் எனவும் வேதனை தெரிவித்து உள்ளனர். மேலும், தேர்விற்கு முந்தைய நாளில் பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் அக்டோபர் 27 மற்றும் 28ம் தேதிகளில் முடிவுசெய்யப்பட்டிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு அக்.27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை – CEO அறிக்கை!

இதனால், இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தேர்வர்கள் நலன் கருதி அக்டோபர் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே மாணவர்கள் தேர்வு எழுதும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறினார். தற்போது, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!