அக்டோபர் 26ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து நாளை ராஜாக்கமங்கலம் பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்தடை:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் அமைக்கப்பட்டு கோரிக்கைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பள்ளிகளுக்கு அக்.27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை – CEO அறிக்கை!
அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடை தொடர்பாக மின்வாரியம் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கிறது. இந்த மின்தடை குறித்த அறிவிப்பால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை மின்தடைக்கு முன்னரே முடிக்க உதவியாக உள்ளது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை ராஜாக்கமங்கலம் பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு – தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
எனவே ராஜாக்கமங்கலம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், ஆலங்கோட்டை, சூரப்பள்ளம், பேயோடு, பிள்ளையாா்விளை, காரவிளை, வைராகுடி, பருத்திவிளை, எறும்புக்காடு, பழவிளை, அனந்தநாடாா்குடி ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு ஊழியர்களின் நலனுக்காக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் சி.ராஜசேகா் கூறியுள்ளார். மேலும் மின் பாதைக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றுவதற்கு வாரிய பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.