பள்ளிகளுக்கு அக்.27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை – CEO அறிக்கை!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற அக்.27 ஆம் தேதி மற்றும் அக்.30 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை விடுமுறை வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உள்ளூர் விடுமுறை:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 114-வது ஜெயந்தி விழா, 59-வது குரு பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இது அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இதில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பல ஊர்களில் இருந்து மக்கள் பலர் கூடுவார்கள். மேலும் அரசு சார்பில் தேவர் உருவசிலைக்கு மரியாதை செய்யப்படும். மேலும் இந்த விழாவின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு – தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
மேலும் முதல்வர் முக. ஸ்டாலின் தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து வழிபடுவார். அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே தேவர் சிலையை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் இந்த ஆண்டு வருகிற 27 ஆம் தேதி மருதுபாண்டியர் குரு பூஜை மற்றும் 30 ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் குரு பூஜை நடைபெற இருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
Airtel & VI பயனர்களுக்கு சூப்பர் திட்டம் – T20 உலகக்கோப்பை போட்டிகள் சலுகை!
இந்நிலையில் அக்.27 ஆம் தேதி 220 வது மருதுபாண்டியர் நினைவு நாள் விழாவும், 30 அம தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்த நாள் விழா மற்றும் 59-வது குரு பூஜை விழா நடைபெற உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் பள்ளிகளும் விடுமுறை வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.