தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் – கூட்டணி கோரிக்கை!

0
தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் - கூட்டணி கோரிக்கை!
தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் - கூட்டணி கோரிக்கை!
தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் – கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கை:

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பணிக்கான காலியிடங்கள் ஏதும் நிரப்பப்படவில்லை.மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கான தேர்வுகளை நடத்துவதற்கான சூழல் அமையவில்லை. பொது மக்கள் அதிகமாக கூடுவது மூலம் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்கும் என்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடுப்பூசி பணிகள் தீவிரமாக்கப்பட்டது.

TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஹால் டிக்கெட் – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!

இதனால் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் துப்புரவாளர், இரவு காவலர், இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலரின் பணிச்சுமையை குறைக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டது.

அக்டோபர் 26ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் கணினி தொழில்நுட்பவியலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும், அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும், காலியாக உள்ள வட்டார வள மேற்பார்வையாளர் பணியிடங்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!