TNPSC தேர்வு ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியது – எதற்காக தெரியுமா?
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அன்று குரூப் 2 மெயின் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குரூப் 2 Mains தேர்வு
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 21ம் தேதி அன்று 5,413 காலியிடங்களுக்கான குரூப் 2 பணியிடத்திற்கான முதற்கட்ட தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற்றது. அன்றைய தினம் காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாது – அமைச்சர் பேட்டி!
இந்த நிலையில் விருதுநகரை சேர்ந்தவர் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இவர் தனது மனுவில், குரூப் 2 Mains தேர்வின் தமிழ் மொழித்தகுதி தேர்வில் தனக்கு வழங்கப்பட்ட வினோத்தாளில் பதிவு எண் தவறாக இடம்பெற்றிருந்ததால், குழப்பம் ஏற்பட்டது. மேலும் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக வினாத்தாளை வாசிப்பதற்கான 15 நிமிட கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் பிற்பகலில் தனக்கு உணவு இடைவெளிக்காக போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சில தேர்வர்களுக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். இவ்வாறு தேர்வு விதிமுறைகள் மீறியதால் மீண்டும் இத்தேர்வை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், TNPSC தேர்வு வாரியம் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி, வழக்கை வருகிற ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download