தமிழகத்தில் கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாது – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்தடை
தமிழகத்தில் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் மக்கள் மின்விசிறி, ஏசி போன்ற மின்சாதன பொருள் அதிகம் பயன்படுத்துவார்கள், அதனால் மின் நுகர்வு அதிகம் ஏற்படுகிறது. மேலும் மின் நுகர்வு இந்த மாதம் 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மின்தடை ஏற்படாமல் இருந்ததால் தான் இந்த அளவு மின் நுகர்வு இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!
இந்நிலையில் கோடைகாலத்தில் மின் நுகர்வு அதிகம் தேவைப்பட்டாலும் மின்தடை ஏற்பாடாது எனவும், சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும், மின் சேவை தொடர்பான குறைபாடு இருந்தால் சேவை மைய எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைங்கள் மூடப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
Exams Daily Mobile App Download