10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!
நாடு முழுவதும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதேபோல், சென்றால் மிகவும் தீவிர நிலையை எட்டி விடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் கொரோனா கால அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், நேற்றைய அறிக்கையின் படி, ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,109 ஆக பதிவான நிலையில், இன்றைய அறிக்கையில் 24 மணி நேர கொரோனா பாதிப்பு 10,753 ஆக குறைந்துள்ளது. தற்போது மொத்தமாக கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53,720 ஆகவும், நேற்று மட்டும் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,58,625 ஆகவும் பதிவாகி உள்ளது.
Exams Daily Mobile App Download