சென்னை மாநகராட்சியில் நீச்சல் பயிற்சி வழங்க புதிய விதிமுறைகள் – 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மாதம் முதல் விடுமுறை விடப்பட இருக்கும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அரசு தடை
தமிழகத்தில் சமீபத்தில் நீச்சல் பயிற்சியின் போது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக அரசு நீச்சல் பயிற்சி அளிக்க பல நிபந்தனைகளை விதித்து ஒப்பந்ததாரர்களிடம் வழங்கி இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு முன்னதாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஒற்றை பெற்றோர் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மேலும் குழந்தைகள் குளிக்கும் போது பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும் எனவும், செல்லப் பிராணிகள் உடன் அழைத்து வர கூடாது எனவும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்கள் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் பல நிபந்தனைகளை மாநகராட்சி விதித்து இருக்கிறது. மேலும் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ள நீச்சல் குளங்களை பராமரிப்பவர்களுக்கு இந்த புது விதிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download