தமிழகத்தில் மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயில் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ள ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாகளை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுறையை அறிவித்து வருகிறது. ஏனெனில் இப்பண்டிகைகளில் அம்மாவடட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மற்றும் மற்ற மாநில மக்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை அப்டேட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி ஐயா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை தொடர்ந்து தற்போது திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயில் மார்ச் 15 அன்று ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றான இங்கு பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – புதிய வசதிகள் அறிமுகம்!
மற்ற ஆண்டுகளை போல இந்தாண்டு தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக ஆழித்தேரோட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி அன்று அம்மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.