என்னை மீறி எப்படி இந்த கல்யாணத்த நடத்துறன்னு பாக்குறேன் – கோபிக்கு வில்லியாக மாறிய ஈஸ்வரி!

0
என்னை மீறி எப்படி இந்த கல்யாணத்த நடத்துறன்னு பாக்குறேன் - கோபிக்கு வில்லியாக மாறிய ஈஸ்வரி!
என்னை மீறி எப்படி இந்த கல்யாணத்த நடத்துறன்னு பாக்குறேன் - கோபிக்கு வில்லியாக மாறிய ஈஸ்வரி!
என்னை மீறி எப்படி இந்த கல்யாணத்த நடத்துறன்னு பாக்குறேன் – கோபிக்கு வில்லியாக மாறிய ஈஸ்வரி!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் வர இருக்கிறது. கோபி ராதிகா திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடக்க, தனது திருமணத்திற்கு கோபி, ஈஸ்வரியை அழைக்க இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் கதையில் அடுத்தடுத்து திருப்பங்கள் உடனே தெரிய வருவதால் மக்கள் பலர் விரும்பி பார்க்கின்றனர். தற்போது இந்த கதையில் அதிரடி மாற்றமாக கோபியும் பாக்கியாவும் பிரிந்துவிட்டனர். ஆனால் பாக்கியா அதை நினைத்து கவலைப்படாமல் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து கொண்டு பல முயற்சிகளை செய்து வருகிறார். மறுபக்கம் கோபி தன்னுடைய குடும்பத்தை பற்றியும், குழந்தைகளை பற்றியும் நினைக்காமல் ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என நினைக்க, ராதிகாவும் அதற்கு சம்மதிக்கிறார்.

இந்நிலையில் ராதிகா கோபியின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. சந்துரு, திருமண மண்டபம் புக் செய்வது முதல், ஜவுளி வாங்குவது வரை எல்லா வேலைகளையும் செய்ய, கோபி திருமணம் ஆக போகிறது என்ற குஷியில் இருக்கிறார். இந்நிலையில் அவர் ராதிகாவிடம் திருமணம் செய்ய இருப்பதை என் அம்மாவிடம் சொல்ல போகிறேன் என சொல்ல ஆனால் ராதிகா உங்க அம்மா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என கேட்கிறார். ஆனால் கோபி எனக்கு என் அம்மா தான் உயிர் அவங்களிடம் சொல்ல வேண்டும் என சொல்லி, ஈஸ்வரியை கோவிலுக்கு வர சொல்கிறார்.

போடு.. செம இனி சின்னத்திரை களைகட்ட போகுது – மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்கள்!

Exams Daily Mobile App Download

கோவிலில் நீண்ட நாட்களுக்கு பின் அம்மாவை பார்த்த கோபி தாய் பாசத்தில் அம்மா கன்னத்தை பிடித்து எப்படி இருக்கீங்க என கேட்கிறார். பின் ஈஸ்வரியும் மகன் பாசத்தில் உருக, உடனே கோபி நான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் நீங்க கண்டிப்பாக வந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என சொல்கிறார். உடனே கோவப்பட்ட ஈஸ்வரி நீ சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு நான் தலை ஆட்டுவேன் என நினைத்தாயா என கேட்டு கோவப்படுகிறார். நீ எப்படி இந்த திருமணத்தை நடத்துகிறாய் என நான் பார்க்கிறேன் என ஈஸ்வரி சவால் விடுகிறார். உடனே கோபியின் முகம் மாறுகிறது. இது குறித்து ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!