ஜனவரி 18 முதல் கோவையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இந்திய ராணுவத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் வருகிற ஜனவரி 18 முதல் 30 வரை கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்:
சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மையத்தின் கீழ் கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பாக ராணுவ பணிக்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வருகிற ஜனவரி 18 முதல் 30 வரை நடத்தப்படவுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு – 47 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம்!!
கோவையில் நடத்தப்படும் இந்த முகாமிற்கு நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த நபர்களை இந்திய ராணுவத்தில் சேர்க்க ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த முகாமில் பங்குபெற முடியும்.
தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் – ரேஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!!
ராணுவ முகாமில் பங்குபெற நுழைவுச்சீட்டை www.joinindianarmy.nic.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருத்து கூட்டம் நேற்று கோவை கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. அதில், “ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும் முகாமில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கொரோனா நோய் பரவல் காரணமாக ஒரு நாளைக்கு 500 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு நான்கு இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள். இது அரசு சார்ந்த வேலை என்பதால் வேலை வாங்கி தருவதாக கூறி யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் விபரங்களுக்கு 0422-2222022 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்