ஜூன் 5ல் தான் பள்ளிகள் திறக்கும் – முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்பட இருக்கும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பிற்காக பள்ளி கட்டிடங்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு மீண்டும் ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை முதல்வர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஆபத்தான அல்லது ஆபத்தானதாக தோற்றமளிக்கும் மரங்கள் போன்றவற்றை பள்ளி வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும்
தமிழகத்தில் 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!
மேலும் அபாயகரமானதாக இருக்கும் மின் கம்பங்கள் அல்லது கம்பிகள் தொடங்கி கொண்டிருந்தால் அதனை அகற்ற வேண்டும். மேலும் பள்ளிகளில் சுத்தமாக குடிநீர் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு அருகிலுள்ள குளங்கள் மற்றும் கிணறுகளைச் சுற்றி சுவர்கள் கட்ட வேண்டும். பள்ளி பேருந்துகள், பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் பிற தனியார் வாகனங்கள் தகுதி சான்றிதழ் மற்றும் காவல்துறை அனுமதிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
பேரிடர் தணிப்பு தொடர்பாக குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை பள்ளிகளுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் கோத்ர சாரதி திட்டம் தொடர வேண்டும். நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு ஆளாகும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். பழங்குடியின மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய ஊக்குவிப்பாளர்களின் உதவியைப் பெற வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download