தமிழகத்தில் 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் மூலமாக மது விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிய 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் பல கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளுக்கு விதிமுறைகளை அரசு நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் மதுபானங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக விற்பது, அரசு நிர்ணயித்த நேரத்தை விட அதிக நேரம் கடை திறந்திருப்பது போன்ற விதிமீறல்களுக்கு துறை ரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ஆனால் இதில் கவனம் செலுத்தாமல் விதிகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வந்த 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகள் அனுமதி இல்லாமல் இயங்கியதாக புகார் எழுந்ததே இதற்கு முக்கிய காரணம். இது குறித்து மாவட்ட எஸ்.பி.சிபாஸ் கல்யாண் உத்தரவிட்ட நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download