மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி – கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து மீண்டும் நேரடி வகுப்புகள்!
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாணவி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் வெடித்தது. மேலும் இந்த பள்ளியானது தீக்கிரையாகி காலவரையறையின்றி மூடப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள்:
கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி ஒருவர் உயிரிழந்தார். இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி போராட்டக்காரர்கள் இப்பள்ளியை சுற்றி வளைத்தனர். மேலும் போராட்டக்காரர்கள் பள்ளி மற்றும் அதன் வளாகத்தை தீக்கிரையாக்கினர். இதனால் இப்பள்ளி தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி மூடப்பட்டது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிற பள்ளிகளிலும் மற்றும் வாடகை கட்டிடங்களிலும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் இதே போன்று விருப்பமுள்ள மாணவர்கள் தங்களின் மாற்று சான்றிதழை பெற்று பிற பள்ளிகளில் சேர்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகளாலும் மாவட்ட ஆட்சியாளர்களும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் பரவும் புதுவகை வைரஸ்கள்.. அச்சத்தில் பெற்றோர்கள் – குழந்தைகளை பாதிக்கும் அபாயம்!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது, நீதிமன்ற உத்தரவுபடி, கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நேரடி வகுப்புகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. மேலும் இப்பள்ளியில் கலவரம் ஏதும் ஏற்படாதவாறு இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.