தமிழகத்தில் பரவும் புதுவகை வைரஸ்கள்.. அச்சத்தில் பெற்றோர்கள் – குழந்தைகளை பாதிக்கும் அபாயம்!
நாளுக்கு நாள் புது புது தொற்று நோய்கள் நாட்டில் பரவி மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நோய்த் தொற்று:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமங்களை அடைந்தனர். தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு சமீப காலமாக தான் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். ஆனால் தற்போது டெங்கு, ஆர்.எஸ்.வி.,மற்றும் ஃபுளு போன்ற நோய்கள் தமிழகத்தில் பரவி வருகின்றது.
பிரமாண்டமாக தொடங்கும் பிரபல நடிகரின் புதிய சீரியல் – மற்ற சீரியல்களில் நடந்த மாற்றம்!
Exams Daily Mobile App Download
பெரியவர்களை விட குழநதைகள் தான் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஏனென்றால் குழந்தைகள் பள்ளியில் மற்றவர்களுடன் அருகில் அமர்ந்து நேரம் செலவிடுவதால் எளிதில் நோய் தொற்று குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படும் அறிகுறிகளான தொடர் இருமல், காய்ச்சல், சளி போன்றவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் பெற்றோர்களை அறிவுறுத்தி உள்ளனர்.