மாநிலத்தில் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு வெளியீடு!
மாநில வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நிறைவடைந்து இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. மேலும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (CBSE) இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கு மார்ச் மாதத்திலேயே 2023-24 கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட்டுவிட்டன.
மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பாடம் கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மாநில வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க இன்னும் 2 வாரங்கள் இருக்கிறது என்றாலும் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடத்திட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.