தபால் அலுவலகத்தில் மாதம் ரூ.50,000 வரை வருமானம் -வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு!
தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் போஸ்ட் ஆபீஸ் ஃபிரான்சைஸ் எடுப்பதன் மூலமாக மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம் என அசத்தலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தபால் அலுவலகம்:
தபால் அலுவலகம் வாடிக்கையாளர்களுக்கு லாபகரமான பல்வேறு திட்டங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. தபால் நிலையத்தை வருமான ஆதாரமாக மாற்றுவதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. அதாவது, போஸ்ட் ஆபீஸ் ஃபிரான்சைஸ் எடுப்பதன் மூலமாகவே வாடிக்கையாளர்கள் மாதம் ரூபாய் 50,000 வரைக்கும் சம்பாதிக்கலாம் எனவும், 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் இந்த போஸ்ட் ஆபீஸ் ஃபிரான்சைஸ் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு வெளியீடு!
முதலில் இந்த தபால் அலுவலகத்திலேயே அவுட்லெட் ஃபிரான்சைஸ், போஸ்டல் ஏஜென்ட் ஃப்ரான்சைஸ் ஆகிய இரண்டு விதமான போஸ்ட் ஆபீஸ் ஃபிரான்சைஸ் உரிமங்கள் இருக்கின்றன. இது குறித்தான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு அஞ்சல் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தபால் அலுவலக உரிமையை பெற்ற பிறகு ஸ்பீடு போஸ்ட், புக்கிங், மணி ஆர்டர்கள், பதிவேடு, தபால் தலைகள், தபால் எழுதுபொருள் மற்றும் மணியாடர் உள்ளிட்ட சேவைகளை தொடரலாம் எனவும், மாதம் ரூபாய் 50,000 வரை சம்பாதிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.