IPL 2021: போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்! T20 உலக கோப்பை தொடர் எதிரொலி!
உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் தற்போது நடைபெற்று வரும் IPL போட்டிகளுக்கான அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணையில் மாற்றம்:
இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் ஐபிஎல் போட்டிகள் ஆகும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இந்த போட்டி தொடர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்ட இந்த போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி நடத்தப்பட்டது. ஆனால் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவர்க்கும் தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது.
IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்! இன்று பெங்களூரு உடன் பலப்பரீட்சை!
தற்போது கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இன்னும் உத்வேகத்துடன் வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் தமிழக வீரர் நடராஜன் உட்பட சிலருக்கு தொற்று ஏற்பட்டது. ஆயினும் தற்போது வரை போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு தான் வருகிறது. இந்த தொடர் அக்டோபர் 17 அன்று வரை நடத்தப்படும் என முன்னர் திட்டமிடப்பட்டது.
IPL 2021: MI vs PBKS: மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஆனால் T20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17 அன்று முதல் தொடங்கி நடைபெறவுள்ளதால் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் போட்டிகள் உட்பட அனைத்தும் முன்னதாகவே மாற்றப்பட்டுள்ளது. கடைசி கட்ட போட்டிகளான அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதிகளில் தலா 2 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதே போல் பிளே அப்பா போட்டிகள் இடைவெளியின்றி அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் அக்டோபர் 17 அன்று நடக்க இருந்த இறுதி போட்டி அக்டோபர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த உடன் உலக கோப்பை தொடர் துவங்க உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.