IPL 2021: MI vs PBKS: மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 42 வது ஆட்டம் மும்பை அணி மற்றும் பஞ்சாப் அணி இரண்டும் தங்களது வெற்றியை நோக்கி களம் இறங்கி இருந்த நிலையில், தற்போது மும்பை அணி வெற்றியை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடர்:
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதும் போட்டிகள் வழக்கம் போல் இன்று மாலை 7:30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் தொடங்கியது. இதுவரை நடந்த 27 போட்டிகளில் மும்பை அணி 14 முறையும், பஞ்சாப் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியினர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்த்தனர். இதனால் முதலில் பஞ்சாப் அணியின் சார்பாக கேப்டன் கேஎல் ராகுல் – மன்தீப் சிங் இருவரும் களம் இறங்கினர். மார்க்கம் அதிக பட்சகமாக அணியில் 42 ரன்களை எடுத்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் மும்பை அணியின் கியரான்பொல்லார்ட் டி 20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணியினர் 135 ரன்களை 6 விக்கெட் வித்தியாசத்தில் எடுத்தனர். இதனால் மும்பை அணியினர் 136 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கினர். மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா 40 மற்றும் திவாரி 45 ரன்கள் என்ற அதிகபட்ச ரன்களை எடுத்திருந்தனர். சூர்யா குமார் எதிர்பாராத விதமாக ஒரு ரன் கூட எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
தமிழகத்தில் நவ.1 முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரத்தில் மீண்டும் தொடங்கியுள்ள 2ம் பகுதி ஆட்டங்களில் மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை என்னும் நிலையில், மும்பை அணிக்கு அதிக அழுத்தம் இருந்து வந்தது. இந்நிலையில், 19 ஓவர் முடிவில் மும்பை அணியினர் 137 ரன்களை 4 விக்கெட் இழப்பிற்கு எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றனர். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முக்கியமாக இருந்த இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி தனக்கு தேவையான வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.