பெண்களுக்கு வட்டி இல்லாமல் ரூ. 5 லட்சம் வரை கடன் உதவி -மாநில அரசின் திட்டம்!
மத்திய மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பெண்களுக்கென மாநில அரசின் சூப்பர் திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு திட்டம்:
உத்தரகாண்ட் மாநில அரசு பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க ‘லக்பதி தீதி திட்டம்’ அதாவது லட்சாதிபதி சகோதரி திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 1.25 லட்சம் பெண்கள் லட்சாதிபதியாக மாற்ற வேண்டும் என்பதே இலக்காக இருக்கிறது. இந்த திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் 1.25 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCIL ஆணையத்தில் Apprentice வேலை – ரூ.9,000/- உதவித்தொகை || உடனே விண்ணப்பியுங்கள்!
இந்த திட்டத்தில் சேர பெண்கள் அந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் பெண்கள் சுய உதவி குழுக்களுடன் இணைந்திருக்க வேண்டும். மேலும் இந்த திட்டம் நவம்பர் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் கீழ் பெண்களின் பொருளாதார மேம்பாடு உத்வேகம் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேர அசல் குடியிருப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவை தேவை. இந்த திட்டம் மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க அவர்களுக்கு எந்தவித நிதி பிரச்சனையும் இல்லாமல் முன்னெடுத்து செல்ல ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் அரசு வழங்கப்படுகிறது.