தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தல் – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகிவிட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது. இதனால், மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதி வேகமாக பரவி வரும் வேளையில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இது வரைக்கும் 2,882 பேருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் 140 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தற்போது பருவமழை காலம் என்பதால் காலரா, மலேரியா போன்ற நோய்களும் பரவி கொண்டிருக்கிறது. இதனால், கொசுவின் மூலமாக பரவக் கூடிய டெங்கு, காலரா போன்ற நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும், டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 9ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
மேலும், கொரோனா பரவலை ஒழிப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட பொதுமக்களை பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 78,78,980 கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இருப்பில் இருக்கிறது. இந்நிலையில், 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மையங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.