302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி!!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 33வது லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்ற நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணியினர் மோதிக் கொண்டனர். ஏற்கனவே, தொடர்ந்து 6 வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி இலங்கையை வென்று, ஏழாவது வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்களின் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனிடையே, டாஸ் வென் று இலங்கை அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதனால், முதலில் களமிறங்கிய இந்திய அணியினர் 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பில் 357 ரன்களை குவித்தனர். விராட், கில், ஷ்ரேயாஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்டினர். இதனால், இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 358 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை – அடுத்த ஜாக்பாட் ரெடி!!
இதன் பின்னர் களம் இறங்கிய இலங்கை அணியினர் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 55 ரன்களை மட்டுமே பெற்றனர். இதன் காரணமாக உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைவான ரன்களை பெற்ற அணியின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும், இந்திய அணி ஏழாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. , புள்ளி பட்டியலில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்து முதலிடத்தையே தக்கவைத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.