மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை – அடுத்த ஜாக்பாட் ரெடி!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதையடுத்து 18 மாத நிலுவைத்தொகையும் வழங்கப்பட இருக்கிறது.
நிலுவைத்தொகை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது தான் நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஊழியர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மத்திய அரசு அகவிலைப்படி நிலுவைத் தொகையுடன் ஃபிட்மென்ட் காரணியும் வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வரையிலும், 18 மாத நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதன் மூலமாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ரூ.2 லட்சம் வரையிலும் நிலுவைத் தொகை வழங்கப்படலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால், 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கண்டிப்பாக அகவிலைப்படி நிலுவைத் தொகையுடன் ஃபிட்மென்ட் காரணியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.