பள்ளிகளுக்கு 2 நாட்கள் திடீர் விடுமுறை – அரசு அறிவிப்பு!!
டெல்லியில் அதிகளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு அடுத்த 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
டெல்லியில் வழக்கத்திற்கும் அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வரும் நிலையில் அதனை குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் மாசு மற்றும் மோசமான காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருவதாக கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இதனுடையே, காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டினால் பொதுமக்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடத்திட்டங்களை மாற்றவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை – அடுத்த ஜாக்பாட் ரெடி!!
இதனுடையே, தற்போது தீபாவளி பண்டிகையும் வரவிருக்கும் நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு டெல்லியில் அதிக அளவில் காற்று மாசுபாடு இருக்கும் என்பதனால் அரசு புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.