இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை – இலங்கை அரசு அறிவிப்பு!!

0
இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை - இலங்கை அரசு அறிவிப்பு!!
இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை - இலங்கை அரசு அறிவிப்பு!!
இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை – இலங்கை அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இந்திய விமானங்களுக்கு தடை:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வருட கொரோனா பாதிப்பை விட இந்த வருட கொரோனா அதிக பேரிழப்புகளை  ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செய்து வருகின்றன. சுகாதாரத்துறை மக்களின் சுய கட்டுப்பாடுகளால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றன.

TN Job “FB  Group” Join Now

இதனால் அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.  தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடாதவாறு ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது. ரயில், பேருந்து சேவைகள் 50 சதவீதமாக இயக்கப்பட்டு வருகிறது .

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்!!

இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவுவதால் பல நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை தற்காலிகமாக தடை செய்துள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து தற்போது இலங்கை அரசு இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருபதால் இம்முடிவு எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!