இந்தியாவில் ஒரே நாளில் 4,12,262 பேருக்கு கொரோனா – 3,980 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தவிர 3,980 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று
கொரோனா பரவல் தொற்று நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று (மே 5) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர 3,980 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகளவு நோய் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த மாநிலங்களில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் பலர் காத்து கிடக்கக்கூடிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பலியானவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோர் விகிதம் ஆகியவற்றை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி,
இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனை அதிகரிப்பு – கொரோனா தாக்கம் எதிரொலி!!
- கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
- இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 2,10,77,410 ஆக உயர்ந்துள்ளது.
- நேற்று ஒரு நாளில் 3,980 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- இதனால் பலி எண்ணிக்கை 2,30,168ஆக அதிகரித்துள்ளது.
- நோய் தொற்றிலிருந்து இதுவரை 1,72,80,844 பேர் குணமடைந்துள்ளனர்.