தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தடுப்புப்பணிகளை விரைந்து செய்ய மற்றும் அவற்றை கண்காணிக்க தமிழக அரசு அனைத்து மாவட்டங்களும் 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்களுக்கு என்று மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுளள்து.
அதிகாரிகள் நியமனம் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. சுமார் 1 இலட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்டங்கள் தோறும் மருத்துவமனைகளில் மருந்து பொருட்கள் மற்றும் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இவை மே 6ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க தமிழக அரசு 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்களுக்கு மாவட்டங்களும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஹெச்.எம் ஜெயராம், என்.சி சாரங்கன், வனிதா இவர்களை தொடர்ந்து 10 ஐ.பி.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் , திருநெல்வேலி, இராணிப்பேட்டை, வேலூர் போன்ற தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!!
இவர்கள் தொற்று பரவ வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து பரிசோதனைக்கு அனுப்புதல், பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்புதல், கடைகள் அலுவலகங்கள், சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் அரசின் கொரோனா விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணித்தல் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலின் நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் நாளை மலை 5 மணிக்கு காணொளி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலந்தலோசிக்க உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்