இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனை அதிகரிப்பு – கொரோனா தாக்கம் எதிரொலி!!
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து ஆன்லைன் வழியாக மருந்து விற்பனை பலமடங்கு உயர்ந்துள்ளது என ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விற்பனை
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மக்கள் ஆன்லைன் வழியாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஆன்லைன் வழியாக நடத்தப்படும் மருந்து விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி மருந்துகள் மட்டுமல்லாது மருத்துவ சாதனங்கள், கவச உடைகள், சத்து மாத்திரைகள் ஆகியவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக கொரோனா தொற்று அதிகமுள்ள மும்பை, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் மருந்து விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது வழக்கத்தை விட 25% முதல் 65% வரை ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனமான 1 எம்.ஜி கூறுகையில், கடந்த மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்!!
முக்கியமாக பேபிபுளு, டாக்ஸ்ஸி ஆகிய மருந்துகள் விற்பனை ஏறத்தாழ 40 முதல் 50 மடங்கு வரை அதிகரித்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல வெல்னஸ் பாரெவர் என்ற மருந்து நிறுவனத்திலும் 25% விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தவிர ஆக்ஸிமீட்டர், தெர்மோமீட்டர் போன்ற சாதனங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக கொரோனா காலங்களில் ஆன்லைன் வழியாக மருந்து வாங்குபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.