தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள்
இன்று முதல் அமல்!!
மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்று (மே 6) முதல் அமலுக்கு வர உள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்தாலும் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் படி அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று (மே 6) முதல் அமலுக்கு வந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
- தனியாக இயங்கும் காய்கறி, பலசரக்கு, மளிகைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
- அந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.
- மளிகை, காய்கறி, பலசரக்கு கடைகளை தவிர பிற கடைகளை திறக்க தடை.
- மருந்து, பால் வினியோகம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு.
- தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி.
- உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
- அரசு, தனியார் பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள், டாக்ஸி ஆகியவற்றில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
- இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள 20 பேர் மட்டுமே அனுமதி.
- ஊரக பகுதிகளிலும் அழகு நிலையங்கள் செயல்பட தடை.
- மீன் மற்றும் இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மட்டுமே திறந்திருக்க அனுமதி.