ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!!
கொரோனா பரவல் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பெங்களூரு மாநகராட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளார்.
கோடை விடுமுறை :
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளையும், பகுதி நேர ஊரடங்கு மட்டும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்குகளையும் அறிவித்து வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மேல்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மாநகராட்சியில் கோடை வெயிலின் தாக்கம் & கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினாலும் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. ஆரம்ப நிலை வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி வரையிலும், மேல்நிலை வகுப்புகளுக்கு மே 31 வரையிலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவல் – மத்திய அரசு எச்சரிக்கை!!
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறியுள்ளார். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் வகுப்புகள் ஜூன் 1 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வானது ஜூன் 21 முதல் ஜூலை 5 வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார் .
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்