தமிழக தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் – முக ஸ்டாலின் அறிக்கை!!
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களை போல தனியார் மருத்துவமனைகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முக ஸ்டாலின் அறிக்கை:
கொரோனா உயிர்கொல்லி நோயிலிருந்து மக்களை காக்கும் உன்னத பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தமிழக அரசு இந்த நோய் பரவலை தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக குணமாக்குவது ஆகிய இரண்டு நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் நாளை (மே 6) முதல் செயல்படுத்தப்பட உள்ளன.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் நோயால் தாக்கப்பட்டவர்களை காக்கும் பணியில் மருத்துவர்கள் தங்களை ஒப்படைத்துள்ளனர். இந்த வைரசின் தீவிரம் அதிகமாக இருப்பதால், மக்களுக்கு உதவும் படி கட்டளை மையம் ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும், மாநிலம் முழுவதும் உள்ள ஆக்சிஜன் அளவு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த கட்டளை மையம் உதவியாக இருக்கும். இதே போல தனியார் மருத்துவமனைகளும் தங்களிடம் உள்ள ஆக்சிஜன் அளவு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு போன்றவற்றை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவு – சென்செக்ஸ் புள்ளிகள் 400க்கு மேல் உயர்வு!!
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் போன்றோர் பெரும் பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இதே போல தனியார் மருத்துவமனைகளும் மக்களை காக்கும் உயரிய பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சிகிச்சை பெற முடியாத ஏழை, எளிய மக்களுக்கு கருணை அடிப்படையில், அவர்கள் உயிரை பணமின்றி மீட்டுத் தர வேண்டும். இது கடினமான காலம். ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.