நாடு முழுவதும் கொரோனா 3வது அலை பரவல் – மத்திய அரசு எச்சரிக்கை!!
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் கட்டாயம் மூன்றாவது அலை தாக்கம் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போடப்படுவதால் இதன் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கை காரணமாக கட்டுக்குள் கொண்டு ,வரப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் வீரியம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. பல தவிர்க்க முடியாத உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது தவிர இந்த இரண்டாம் அலையில் பலருக்கு உருமாறிய கொரோனா பரவல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இன்று முதல் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மீண்டும் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் உருமாறிய கொரோனா, தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை, கோழிக்கோடு, எர்ணாகுளம், குருகிராமில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்