தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய புதிய நடவடிக்கை – மத்திய அரசு அதிரடி!
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்வது குறித்து மத்திய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதனை செய்து முடிக்க காலக்கெடுவும் கொடுத்துள்ளது.
மத்திய அரசு:
நாடு முழுவதும் பல மாநிலங்களை தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இந்த நெடுஞ்சாலைகளில் மொத்த தூரம் 1.46 லட்சம் கிலோமீட்டர் ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் அங்கங்கே காணப்படும் பள்ளங்களால் விபத்துகள் பல ஏற்படுகின்றன. அதனால் அந்த பள்ளங்களை சீரமைத்து சீரான பயணத்தை உறுதி செய்ய மத்திய அரசு சில நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
அதாவது பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது, அவற்றை தொடர்ச்சியாக உறுதி செய்வது நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களின் பொறுப்பு என தெரிவித்துள்ளது. அதனால் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கு பொறுப்பு வகிக்கும் இயக்குநர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது எதாவது பிரச்சனை இருந்தால் அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த பணிகளை முடிக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் என தெரிவித்துள்ளது.