“AI தொழில்நுட்பத்தில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா…!! பிரதமர் வெளியிட்ட அதிரடி தகவல் …!!
இந்தியாவில் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், மாணவர்கள் AI தொடர்பான படிப்புகளையே தற்போது அதிகம் தேர்வு செய்து படித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் அலுவலகம் இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, “AI தொழில்நுட்பத்தில் முதலில் சிறந்து விளங்கிய அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளி தற்போது இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது. மேலும், “இந்தியாவில் உள்ள அலுவலக பணியாளர்கள் 10 பேரில், குறைந்தபட்சம் 7 பேர் ஏதேனும் ஒரு வகையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும்” குறிப்பிட்டுள்ளது. மேலும், சமீபத்தில் நடைபெற்ற கூகிளின் வருடாந்திர மாநாட்டில் பேசிய, அந்நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை “இந்தியா தான் AI தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதில் முதன்மையில் உள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


























