
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு…!! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், “வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்குமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடிகளில் பயிலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அதன் அருகில் அமைந்துள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும்” உத்தரவிட்டுள்ளது.

























