டெல்லி முதல்வர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தொடர்.. பாஜக வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு..
2025 ஆம் ஆண்டுக்கான டெல்லி சட்டமன்றத் தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக அமையும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது. அதன்படி பிப்ரவரி 8-ம் தேதி அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) வெற்றி பெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த இத்தேர்தல் பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
“AI தொழில்நுட்பத்தில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா…!! பிரதமர் வெளியிட்ட அதிரடி தகவல் …!!
அதாவது, “2025 ஆம் ஆண்டுக்கான டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பிறகு டெல்லி முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை குழு கூட்டத்தொடர் இன்று (19-02-2025) இரவு 7 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி முதல்வராக பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா மற்றும் ஆசிஷ் சூட் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆலோசனை குழு கூட்டத்தொடரின் முடிவுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய முதல்வரின் பதவியேற்பு விழா நாளை (20-02-2025) நடைபெறும்” என கூறப்படுகிறது.


























