
IND vs ENG 1st ODI போட்டி இந்தியாவுக்கு சாதகமாக அமையுமா..? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்..
சர்வதேச டி20 போட்டி 2025-யில் இந்திய மற்றும் இங்கிலாந்திற்கு இடையில் புனேவில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதை தொடர்ந்து, ரோஹித் சர்மா மற்றும் ஜோஸ் பட்லர் தலைமையிலான ஒருநாள் போட்டியில் மீண்டும் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன. மேலும், டி20 போட்டியை தவறவிட்ட நிலையில் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிர பயிற்சி மேற்கொள்வதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான குறித்த முதல் ஒருநாள் போட்டி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “இங்கிலாந்துக்கு எதிரான நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணியை 47.4 ஓவர்களில் 248 ரன்களில் இந்திய அணி வீழ்த்தியது. மேலும், ராணா 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்”. இதை தொடர்ந்து, 249 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

























