அரசு சாரா ஊழியர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு 25 லட்சமாக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

0
அரசு சாரா ஊழியர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு 25 லட்சமாக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
அரசு சாரா ஊழியர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு 25 லட்சமாக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
அரசு சாரா ஊழியர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு 25 லட்சமாக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

அரசு சாரா ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பிற்கான தொகைக்கு வருமான வரி விலக்குவரம்பு 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஈட்டிய விடுப்பு:

அரசு சாரா ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கான நிவாரணம் அளிக்கும் விதமாக புதிய உத்தரவு ஒன்று மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு சாரா ஊழியர்களுக்கு மாதத்தில் சில நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த விடுப்பினை ஊழியர்கள் பயன்படுத்தாத பட்சத்தில் எத்தனை நாட்கள் விடுப்பு பயன்படுத்தப்படவில்லையோ அந்த நாட்களுக்கான ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அரசு சாரா ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொகைக்கு வருமான வரி விலக்கு வரம்பு 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதாவது, அரசு சாரா ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் போது பெறப்படும் இந்த ஈட்டிய விடுப்பு தொகைக்கான வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!