தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கனமழை – இனி வெயிலை பத்தி கவலை இல்ல.. மழை கொட்ட போகுது!
மேலும் இந்த திட்டத்தில் 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பித்தால் மாதம் ரூ. 200ம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300,12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் அதனை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும் குடும்ப வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தால் 10 ஆண்டுகள் வரை அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Join Our WhatsApp Group” for Latest Updates