தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு – மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில உயர்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து புகார் எழுந்துள்ளது.
சிறப்பு வகுப்புகள்:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கோடை கால வெப்பம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்து இருந்தனர். அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டது. புதிய கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக முன்னதாக புகார்கள் எழுந்தது.
அரசு சாரா ஊழியர்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு 25 லட்சமாக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!
இதனடிப்படையில் தமிழக கல்வித்துறை கோடை விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் உடனடியாக அதனை நிறுத்த உத்தரவிட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு பொதுச்செயலாளா் திருப்பூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், இதன்பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
Join Our WhatsApp Group” for Latest Updates