தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – தொடக்க கல்வித்துறை வெளியீடு!

0
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - தொடக்க கல்வித்துறை வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - தொடக்க கல்வித்துறை வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – தொடக்க கல்வித்துறை வெளியீடு!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை வழங்குவது குறித்து கால தாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை வழங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் அரசு தொடக்க நிலை, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணிவரன் முறை செய்தல், தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குதல் போன்ற நிர்வாக பணிகள் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் சில மாவட்டங்களில் இந்த பணிகளில் கால தாமதம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்ட காலத்தில் உரிய ஆணைகள் வழங்கப்படவில்லை எனவும் புகார் வந்துள்ளது. குறிப்பாக தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிநியமனங்கள் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நீண்ட நாட்களாக பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் முடிக்கப்படவில்லை என ஆசிரியர்களிடம் இருந்து புகார் வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை செய்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்தி அதற்கான ஆணைகளை வழங்க வேண்டும் எனவும், ஆணை வழங்காத காரணங்களை முழுமையான தொகுப்பறிக்கையை மாவட்ட அளவில் நவ. 24 ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!