அரசு ஊழியர்கள் ஊக்கத்தொகை உயர்வு கோரிக்கை – அரசின் முடிவு என்ன?

0
அரசு ஊழியர்கள் ஊக்கத்தொகை உயர்வு கோரிக்கை - அரசின் முடிவு என்ன?
அரசு ஊழியர்கள் ஊக்கத்தொகை உயர்வு கோரிக்கை - அரசின் முடிவு என்ன?
அரசு ஊழியர்கள் ஊக்கத்தொகை உயர்வு கோரிக்கை – அரசின் முடிவு என்ன?

தமிழக அரசின் ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெறும் கூடுதல் உயிர்க்கல்வி தகுதிகளுக்கான ஊக்கத்தொகை குறித்த கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

ஊக்கத்தொகை உயர்வு:

தமிழக அரசின் ஊழியர்கள் தங்கள் பார்க்கும் பணிக்கான கல்வி தகுதியை விட பணிக்காலத்தில் உயர் கல்வித் தகுதிகளை படித்து பெறும் பட்சத்தில் இவர்களுக்கு ஊதிய உயர்வு ஆறு சதவீதம் வரை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த ஊதிய உயர்வு அவர்களின் பணிக்காலம் முழுவதும் மாத சம்பளத்துடன் வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா கால நிதி நெருக்கடி சமயத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் தமிழக அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கான உயர்கல்வி ஊக்கத்தொகைக்கான நிபந்தனைகளை புதிதாக அறிவித்துள்ளது. அதன்படி பிஎச்டி படிப்பிற்கு ரூ.25000, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்புக்கு ரூ. 20,000, இளநிலை மற்றும் பட்டய படிப்புகளுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ரூ. 500 கேஸ் சிலிண்டர் மானியம், விவசாய கடன் தள்ளுபடி – அள்ளிவீசப்படும் அறிவிப்புகள்!

மேலும் இத்தொகையை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மிகவும் சிரம நிலையில் உள்ளதால் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல் ஊக்கத்தொகையானது ஒரே ஒருமுறை மட்டும் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஊக்கத்தொகைகளை பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி, பணிக்காலம் முழுவதும் ஊதிய உயர்வு வழங்குவதற்கு தமிழக அரசு மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!