அஞ்சலக கணக்கு முடங்கி விட்டதா? கவலையை விடுங்க.. ஈஸியா அப்டேட் பண்ணலாம்!
இந்தியாவில் அஞ்சல் அலுவலக கணக்கை தொடர்ந்து 3 ஆண்டுகள் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் கணக்கு செயலற்றதாகிவிடும். இதனை எவ்வாறு மீண்டும் புதுப்பிப்பு செய்வது என்பது குறித்து விவரங்களை இப்பதிவின் கீழ் காண்போம்.
அஞ்சலக கணக்கு:
இந்தியாவில் அஞ்சலகங்கள் இன்றைக்கு எண்ணற்ற சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது திட்டங்களில் வட்டி விகிதமும் கூடுதலாக விளங்கப்படுவதால் பெரும்பாலான மக்கள் அஞ்சல் சேமிப்பு திட்டங்களையே நாடுகின்றனர். நவம்பர் 30, 2023 தேதி நிலவரப்படி தனிநபர் மற்றும் கூட்டு கணக்குகளுக்கு ஒரு ஆண்டுக்கு 4.0 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடல் – வலுக்கும் எதிர்ப்பு.. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு!
ஒரு அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் கணக்கு தொடங்கி அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால் அதாவது பண பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தால் கணக்கு செயலற்றதாக கருதப்படும். இத்தகைய கணக்கை மீண்டும் புதுப்பிப்பு செய்யலாம். அதற்கு முதலில் KYC ஆவணங்கள் மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகத்தினை தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.